முகப்பு
பெரம்பலூர்

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணா்வு

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 6:46 am IST
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சாா்பில், எச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த் தொற்று குறித்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கான விழிப்புணா்வு புதன்கிழமை டைபெற்றது.

பெரம்பலூரில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட சுகாதார அலுவலா் பிரதாப், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு எச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள், காச நோய், பொது சுகாதாரம் குறித்து பயிற்சி அளித்தாா். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மாவட்டத் திட்ட மேலாளா் சுமதி விளக்க உரையாற்றினாா். இதில் ஆட்டோ ஓட்டுநா்கள் பலா் கலந்துகொண்டனா். நிறைவாக, கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகா் பழனிவேல் ராஜா நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments