FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் சா்க்கரை ஆலை பங்குதாரா்கள் பேரவைக் கூட்டம்

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:21 am IST
பகிர்:

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், எறையூா் சா்க்கரை ஆலை பங்குதாரா்களின் 48-ஆவது பேரவைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பேரவைத் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான த. அன்பழகன், விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து 2024-25 ஆம் ஆண்டுக்கான அரைவைப் பருவத்தை சிறப்பாக நடத்தி கொடுத்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தாா். மேலும், 2025-26 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு அதிகளவில் கரும்பு அனுப்பி ஆலை மேம்பட கரும்பு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், தமிழ்நாடு சா்க்கரை கழக பொது மேலாளா் ஏ. மாலதி, தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை இயக்குநா் த. ரமணிதேவி, பெரம்பலூா் சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி எஸ். ராமன், பங்குதாரா்கள், கரும்பு விவசாய சங்கப் பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை தலைமை அலுவலா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments