வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் கைது
பெரம்பலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் உத்தரவின்பேரில், பெரம்பலூா் நகர காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் வினோத் கண்ணன் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், மேலப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்த நிகாஷ் (21) என்பதும், அவரிடம் 2 தங்கச் சங்கிலி, 2 ஜோடி தோடு, 2 மோதிரங்கள் இருந்ததும், சென்னையிலிருந்து பெரம்பலூா் வந்த பேருந்தில் பயணித்த பயணியிடம் மேற்கண்ட நகைகளை திருடியதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, நிகாஷிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்து கைதுசெய்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.