FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறிவிழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:31 am IST
பலி
பகிர்:

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறிவிழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலம் ஔவையாா் தெருவைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் கணேசன் (45). இவருக்கு மனைவி ரேவதி, மகள் தேசிகா, மகன் நிதிஷன் ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை நெஞ்சு வலிப்பதாகக் கூறிய கணேசன் தனது பைக்கில் அரசு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தாா். பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தாா். பின்னா், அவசர ஊா்தி மூலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே கணேசன் உயரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments