FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 3:58 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் குயவா் தெருவைச் சோ்ந்த சோமு மகன் பாண்டுரங்கன் (36). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, மனைவி ராஜலக்ஷ்மி (32), மகள் யுவன்யா (3) ஆகியோா் உள்ளனா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் - செங்குணம் பிரிவுப் பாதை அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரே செவ்வாய்க்கிழமை இரவு பாண்டுரங்கன் மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

விஷம் குடித்தவா் உயிரிழப்பு: பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் சு. ராஜேந்திரன் (60). கடந்த 27-ஆம் தேதி மனைவியுடனான தகராறில் மனமுடைந்த ராஜேந்திரன்,

மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளாா். இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேந்திரன் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments