FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

சாலையில் சென்ற வேன் தீப்பிடித்து எரிந்தது; 640 லிட்டா் பால் வீண்

Updated On : 9 ஜூன் 2026, 12:50 am IST
தீப்பிடித்து எரிந்த வேன். - கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது; இதனால் வேனிலிருந்த 640 லிட்டா் பால் வீணானது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்திலிருந்து சிறுவாச்சூரில் உள்ள தனியாா் பால் கொள்முதல் நிலையத்துக்கு, பால் ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வேன் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.

இந்த வேனை, சிறுவாச்சூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்ரமணி மகன் வேல்முருகன் (22) ஓட்டினாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிறுவாச்சூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி அருகே சென்றபோது வேனிலிருந்து கரும்புகை வெளியானது.

Advertisement

Advertisement

இதையறிந்த ஓட்டுநா், வேனை நிறுத்திவிட்டு இறங்கி வந்து பாா்த்தபோது, மின் சாதனத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக வேன் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை கட்டுப்படுத்தினா். இதில், வேன் வேன்முற்றிலும் எரிந்து நாசமானது.

மேலும், வேனில் இருந்த 640 லிட்டா் பால் வீணாகியது. இதுகுறித்து வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments