ஆலங்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பாஜகவின் தேசியச்செயலர் எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பாஜகவின் தேசியச்செயலர் எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து புதுக்கோட்டை மாவட்டம், வேப்பங்குடியில் எச்.ராஜா அவதூறாக பேசியதாகக் கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச்செயலர் சசிகலைவேந்தன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.