FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

தீபம் ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து பெண் பலத்த காயம்

ஆலங்குடி சிவன் கோயிலில் புதன்கிழமை தீபம் ஏற்றும்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்ததில் பெண் பலத்த காயமடைந்தார்.

Updated On : 7 ஜூன் 2018, 8:49 am IST
பகிர்:

ஆலங்குடி சிவன் கோயிலில் புதன்கிழமை தீபம் ஏற்றும்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்ததில் பெண் பலத்த காயமடைந்தார்.
ஆலங்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற  தர்மசம்வர்த்தினி உடனுறை நாமபுரீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதில், ஆலங்குடி திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மனைவி வளர்மதி (43) கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வளர்மதியின் சேலையில் தீப்பற்றி எரிந்ததில் அவருக்கு பலத்த தீக் காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து, அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளர்மதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆலங்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments