"மொழியை வளப்படுத்த கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'
மொழியை வளப்படுத்திக் கொள்ள கிடைக்கும் வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் உலக தமிழ்ச்சங்க இணைச் செயலாளரும், ஊக்குவிப்பு பயிற்றுநருமான சிவராஜ்.
மொழியை வளப்படுத்திக் கொள்ள கிடைக்கும் வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் உலக தமிழ்ச்சங்க இணைச் செயலாளரும், ஊக்குவிப்பு பயிற்றுநருமான சிவராஜ்.
ஆலங்குடி அருகே வல்லத்திராகோட்டை இராமசாமி தெய்வானையம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் சின்னப்பன் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாணவர் அரங்குளவன் வரவேற்றார். உலக தமிழ்ச்சங்க இணைச் செயலாளரும், ஊக்குவிப்பு பயிற்றுநருமான சிவராஜ் பேசியது: மொழியை வளப்படுத்திக் கொள்ள கிடைக்கும் வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆங்கில செய்தித்தாள்கள், சிற்றிதழ்கள் வாசிப்பின் விளிம்பு நிலையில் இருந்து ஒருவனை வாழ்க்கையின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செல்ல உதவும். மேலும், ஒரு மனிதன் போட்டித் தேர்வு, போட்டி நிறைந்த சமூகத்தை சந்திக்க தொடர் வாசிப்பு அவசியம்என்றார். விழாவில் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் மகேந்திரன், பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.