FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே நகைக்காக மூதாட்டி கொலை

மூதாட்டியை கொலை செய்து, மூன்றரை பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 21 ஜூலை 2024, 2:15 am IST
பகிர்:

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மூதாட்டியை கொலை செய்து, மூன்றரை பவுன் நகைகளை சனிக்கிழமை கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொன்னமராவதி அருகே உள்ள மேலமேலநிலை ஊராட்சி, கீழப்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி சேது அம்மாள்(80). இவா் சனிக்கிழமை காலை கீழப்பட்டி கீழக்கண்மாய் கரையில் வேப்பம்பழம் சேகரிக்கச் சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் மூதாட்டியை தாக்கி கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

தகவலின்பேரில், பொன்னமராவதி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments