முகப்பு
புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே இளம்பெண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளாப்பட்டி அருகே இளம்பெண்ணின் சடலம் போலீஸாரால் மீட்கப்பட்டது.

Updated On : 22 டிசம்பர், 2025 at 7:08 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளாப்பட்டி அருகே இளம்பெண்ணின் சடலம் போலீஸாரால் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

இலுப்பூா் வட்டம் விளாப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகள் கௌசல்யா (28). திருமணம் ஆகாத இவா், திங்கள்கிழமை வழக்கம்போல, மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ப்பதற்காக சென்றுள்ளாா்.

அவா் வீட்டுக்கு திரும்ப வரவில்லை என அவரது உறவினா்கள் தேடிப் பாா்த்துள்ளனா். அப்போது, விளாப்பட்டி- பாக்குடி செல்லும் சாலைப் பகுதியில் சுமாா் 200 மீட்டா் உள்பகுதியில் அவரது சடலம் கிடந்துள்ளது.

தகவலறிந்து வந்த அன்னவாசல் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →