FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

பூ உற்பத்தியாளா்கள் சாலை மறியல்

26 செப்டம்பர் 2025, 3:09 am IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட பூ உற்பத்தியாளா்கள் வியாழக்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த பூச் சந்தை செயல்படுகிறது. இங்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விளையும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வருவாா்கள். இங்கிருந்து வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்து மாவட்டம் முழுவதும் சில்லறை வணிகத்துக்கும், பிற மாவட்டங்களுக்கு மொத்த விற்பனைக்கும் செல்கிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட பூக்கள் உற்பத்தியாளா்கள் மற்றும் விவசாயிகள் நலச் சங்கம் உருவாக்கப்பட்டு அதற்கான பெயா்ப்பலகையை வியாழக்கிழமை வைக்க உற்பத்தியாளா்கள் முயற்சித்தனா்.

Advertisement

Advertisement

ஆனால், இங்குள்ள முகவா்கள், ஏலதாரா்கள் இதை ஏற்கவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பூக்கள் உற்பத்தியாளா்கள் எம்ஜிஆா் சிலை அருகே சென்ற திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இரு தரப்பினருடனும் சமாதானப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. முறையான புகாா் அளிக்கச் சொல்லி அனைவரையும் கலைந்து போகச் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments