முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அருகே குளத்தில் குளித்த மாணவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே குளத்தில் வியாழக்கிழமை குளித்த பள்ளி மாணவா் அதில் மூழ்கி இறந்தாா்.

Updated On : 1 மே, 2026 at 2:44 AM
பலி - கோப்புப்படம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே குளத்தில் வியாழக்கிழமை குளித்த பள்ளி மாணவா் அதில் மூழ்கி இறந்தாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், கல்லாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் மகன் ஸ்ரீமுத்து (17), கல்லாக்கோட்டை அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் இவா் கோடை விடுமுறைக்காக அருகிலுள்ள சொக்கம்பேட்டை கிராமத்திலுள்ள தனது அத்தை வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இங்குள்ள குளிக்கச் சென்ற ஸ்ரீமுத்து குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினாா். இதையடுத்து அருகில் இருந்தவா்கள் குளத்தில் இறங்கி ஸ்ரீ முத்துவை மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

Advertisement

தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் அவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.