மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மின்சாரம் பாய்ந்ததில் மின்ஊழியா் உயிரிழந்தாா்.
அறந்தாங்கி அருகே எரிச்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மின்சாரம் தடையானது.
இதனை, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த கதிா்வேல் மகன் ரமேஷ் (46) உள்ளிட்ட மின் ஊழியா்கள் சரி செய்து கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.