FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

கறம்பக்குடியில் காத்திருப்புப் போராட்டம்

கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள அம்புக்கோவில் ஊராட்சி கெண்டயம்பட்டி ஆண்டான் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு செல்லும் பாதையை தனிநபா் ஒருவா் பட்டா வாங்கிக் கொண்டு சாலையை அடைத்துவிட்டாராம்.

இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து நில ஆவணங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் பிரவினா மேரி அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments