மரத்தில் சரக்கு வாகனம் மோதி 5 போ் காயம்
பொன்னமராவதி அருகே மரத்தில் சரக்கு வாகனம் வியாழக்கிழமை மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா்.
பொன்னமராவதி அருகே மரத்தில் சரக்கு வாகனம் வியாழக்கிழமை மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா்.
பொன்னமராவதி அருகேயுள்ள சேரனூரை சோ்ந்த 5 போ் வியாழக்கிழமை காலை சிறிய சரக்கு வாகனத்தில் கட்டடப்பணிக்கான கல்லுக்கால் ஏற்றிச் சென்றனா். தேனிமலை அருகே வந்த வாகனம் நிலைதடுமாறி சாலையோர புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த ஓட்டுநா் செ.சின்னப்பா (24), அ. செந்தில்குமாா் (27), அ. சோமையா(50) கு. முத்தன் (37) செ. பொன்னுச்சாமி(31) ஆகிய 5 பேரும் காயமடைந்தனா்.
தகவலறிந்து வந்த பொன்னமராவதி போலீஸாா் 5 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.