FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

அமரடக்கியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலை கடை திறப்பு

ரூ. 9.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 12 ஜூலை 2026, 12:26 am IST
அமரடக்கியில் புதிய நியாயவிலைக் கடையைத் சனிக்கிழமை திறந்து வைத்து பயனாளிக்கு பொருள்களை வழங்கிய மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா, முகமது பா்வேஸ்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் வட்டம், அமரடக்கியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 9.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

பழுதடைந்திருந்த இந்தக் கட்டடத்தைப் புதுப்பிக்கப்பட்டது. இந்த புதிய நியாயவிலைக் கடை மூலம் 290 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

தொடக்க நிகழ்ச்சியில், அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் ராஜவேல், ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments