FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நகைக் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தங்க நகைகள் மீது மத்திய அரசு ஒரு சத கலால் வரி விதித்துள்ளதைக் கண்டித்து, தஞ்சாவூர் ரயிலடியில் தஞ்சாவூர் நகர காசுக்கடை வர்த்தகர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

தங்க நகைகள் மீது மத்திய அரசு ஒரு சத கலால் வரி விதித்துள்ளதைக் கண்டித்து, தஞ்சாவூர் ரயிலடியில் தஞ்சாவூர் நகர காசுக்கடை வர்த்தகர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே, மத்திய பட்ஜெட்டில் தங்க நகைகள் மீது விதிக்கப்பட்ட ஒரு சத கலால் வரியை ரத்து செய்யக் கோரி அகில இந்திய அளவில் புதன்கிழமை முதல் தொடர்ந்து

நகைக் கடைகள் அடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 2,000 நகைக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், தங்க நகைகள் மீது மத்திய அரசு ஒரு சத கலால் வரி விதித்துள்ளதைக் கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் வாசுதேவன், எஸ்.ஆர். வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments