FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பாசன வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே பாசன வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:14 am IST
பகிர்:

கும்பகோணம் அருகே பாசன வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே திருவைக்காவூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நீலத்தநல்லூர் வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் திருவைக்காவூர், குடிதாங்கி, மேலாத்துக்குறிச்சி, நீலத்தநல்லூர், காவற்கூடம் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடும் நிலையில் நீலத்தநல்லூர் வாய்க்காலில் பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்படவில்லை. 
எனவே, குடிதாங்கி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வாய்க்காலில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
இதில், தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்வதால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், மின் மோட்டார் மூலம் பாசனம் செய்யப்படுவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், எனவே உடனடியாகப் பாசனத்துக்குத் தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments