அஞ்சல் துறை சார்பில் வங்கி - விழிப்புணர்வுப் பேரணி
தஞ்சாவூரில் அஞ்சல் துறை சார்பில் வங்கி திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூரில் அஞ்சல் துறை சார்பில் வங்கி திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் தொடங்கிய இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ரயிலடியில் முடிவடைந்தது. இதில், வங்கிச் சேவை தொடர்பான விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்பேரணியில் முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவிக் கண்காணிப்பாளர் கலைவாணி உள்பட 750-க்கும் அதிகமான அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
4 இடங்களில்...: தஞ்சாவூரில் தலைமை அஞ்சலகம், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் உள்ள அஞ்சலகம், கிழக்குக் காவல் நிலையம் அருகில் உள்ள அஞ்சலகம், மேலவஸ்தா சாவடியில் உள்ள அஞ்சலகம், இனாத்துக்கான்பட்டியில் உள்ள கோயில் ஆகிய இடங்களில் முதல் கட்டமாக அஞ்சல் துறை சார்பில் வங்கி திறக்கப்பட உள்ளது என அஞ்சல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.