FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

வங்கியில் கள்ள நோட்டுகள்: போலீஸார் விசாரணை

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 3 வங்கிகளில் இருந்து கள்ள நோட்டுகள் வந்தது குறித்து ரிசர்வ் வங்கி அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On : 7 ஜூன் 2018, 9:18 am IST
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 3 வங்கிகளில் இருந்து கள்ள நோட்டுகள் வந்தது குறித்து ரிசர்வ் வங்கி அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர், கும்பகோணத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட 3 வங்கிகளில் இருந்து 2017, நவ. 1-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்குப் பண பரிவர்த்தனை நடைபெற்றது. இதில், தஞ்சாவூரில் உள்ள வங்கியில் இருந்து 25 நோட்டுகளும், கும்பகோணத்தில் உள்ள இரு வங்கிகளில் இருந்து 5 நோட்டுகளும் என மொத்தம் 30 கள்ள நோட்டுகள் வந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் ரிசர்வ் வங்கியின் சென்னை துணைப் பொது மேலாளர் ஆர்.எஸ். ரவீந்திரன் புகார் செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்டக் குற்றப் பிரிவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார் ஆணையிட்டார். இதன்படி, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments