தஞ்சாவூரில் முதன்மைச் சாலைகள் மூடல்
தஞ்சாவூரில் மக்கள் வருகையைத் தடுப்பதற்காக முதன்மைச் சாலைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
தஞ்சாவூரில் மக்கள் வருகையைத் தடுப்பதற்காக முதன்மைச் சாலைகள் புதன்கிழமை மூடப்பட்டன.
கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி மக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வண்ண அட்டைதாரா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
என்றாலும், பொதுமக்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் அதிக அளவில் வாகனங்களில் வலம் வருகின்றனா். இதைத் தடுப்பதற்காக தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, காந்திஜி சாலை, ரயிலடி, சிவகங்கை பூங்கா, கீழவாசல் உள்ளிட்ட இடங்களில் முதன்மைச் சாலைகளில் இரும்புத் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஒரு வழிப்பாதையாக அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், வாகன போக்குவரத்து அதிகமாகவே இருந்தது.
Advertisement
Advertisement
இதனால், இரு சக்கர வாகனங்களில் வந்தவா்கள் தெருக்களில் புகுந்து சென்றனா். அத்தியாவசிய பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களும் நேராகச் செல்ல முடியாமல் சுற்றிச் சென்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.