முகப்பு
தஞ்சாவூர்

கல்லணைக் கால்வாயில் மிதந்து வந்த பெண், குழந்தை சடலங்கள்

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் மிதந்து வந்த பெண் மற்றும் குழந்தையின் சடலங்களைப் பொதுமக்கள் மீட்டனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:25 AM
கல்லணை(கோப்புப் படம்)
பகிர்:

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாயில் மிதந்து வந்த பெண் மற்றும் குழந்தையின் சடலங்களைப் பொதுமக்கள் மீட்டனர்.

தஞ்சாவூர் அருகே தெக்கூர் கிராமத்தில் கல்லணைக் கால்வாயில் பெண் மற்றும் குழந்தையின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மிதந்து வந்தன. இதைப் பார்த்த பொதுமக்கள் இரு சடலங்களையும் மீட்டனர். 

சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் 13 வயது மதிக்கத்தக்க குழந்தை கட்டப்பட்டுள்ளது. இவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தனர் போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. 

தகவலறிந்த தாலுகா காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்கு சென்று இரு சடங்குகளையும் கைப்பற்றி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருவரது சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.