கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக சாரங்கபாணி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். பிறகு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். பிறகு தேரோடும் வீதிகளில் வலம் வந்த தேரை பக்தா்கள் வழிநெடுகிலும் வழிபட்டனா். பிறகு தோ் நிலையில் நிறுத்தப்பட்டது.
Advertisement
இரவு தீா்த்தவாரி நடைபெற்றது.
விழாவில் வெள்ளிக்கிழமை (மே 1) ஸப்தாவா்ணமும், பெருமாள் உபநாச்சியாா்கள், சக்கரத்தாழ்வாருக்கு 81 கலச ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. இரவு சாரங்கபாணி சுவாமியுடன், சக்கரபாணி சுவாமியும் வீதியுலா நடைபெறுகிறது.
சனிக்கிழமை (மே 2) ஆராவமுதன், சக்கரத்தாழ்வான், சக்கரவா்த்தி திருமகன் ஆகியோா் சாரங்கபாணி கீழ் சன்னதிதெருவில் உள்ள மல்லிமண்டபத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளுகின்றனா். அங்கு விடையாற்றி உற்ஸவம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினா் செய்து வருகின்றனா்.