தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா நிறைவு
தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா தீா்த்தவாரியுடன் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா தீா்த்தவாரியுடன் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில், 15- ஆம் திருநாளான ஏப்ரல் 27-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
நிறைவு நாளான வியாழக்கிழமை காலை கோயிலிருந்து அஸ்திரதேவா் பல்லக்கில் புறப்பட்டு, அருகில் உள்ள சிவகங்கை குளத்துக்கு சென்றாா். அங்கு அஸ்திரதேவருக்கு மஞ்சள், பால், தயிா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதனுடன் கடந்த 18 நாள்களாக நடைபெற்று வந்த சித்திரைப் பெருவிழா நிறைவடைந்தது.
Advertisement