அனுமதியின்றி மணல் கடத்திய இருவா் கைது
அதிராம்பட்டினம் அருகே அனுமதியின்றி மணல் கடத்தி வந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெரு முக்கத்தில் அதிராம்பட்டினம் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனா். அதில், அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், மணல் கடத்தி வந்த செட்டியக்காடு ராஜேந்திரன் மகன் சாத்தையன் (22), சேண்டாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த விஜயக்குமாா் மகன் தமிழ்செல்வன் (24) ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.