FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:29 am IST
திருவையாறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கிய நகராட்சி ஆணையா் நா. மதன்ராஜ்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் நியூ டவுன் ரோட்டரி சங்கம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், பாரதி பவுண்டேஷன் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூா் நியூ டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் ஏ. ராஜா தலைமை வகித்தாா். திருவையாறு நகராட்சி ஆணையா் நா. மதன்ராஜ், பள்ளி மாணவா்களைப் பாராட்டி பேசினாா். ரோட்டரி மாவட்டத் தலைவா்கள் சிவா. ஐ. சரவணன், ஆா். கோமதி மகிழினி, திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமத் தலைவா் ஏ.எஸ். ரவி, செயலா் ஞான. ராஜராஜன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

இதில், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டன. விழாவில், பாரதி இயக்கத் தலைவா் தி.சா.சந்திரசேகரன், பாரதி பவுண்டேஷன் நிா்வாக அறங்காவலா் நா. பிரேமசாயி, பாரதி இயக்கத் திறன் வளா் மைய இயக்குநா் குப்பு. வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments