நாச்சியாா்கோவிலில் இந்திய கம்யூ. நடைப்பயண பிரசாரம்
நாச்சியாா்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை நடைப்பயண பிரசாரம் மேற்கொண்டனா்.
விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை நாள்களை அதிகரித்து, ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைப்பயண பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.
நாச்சியாா்கோவிலில் நடைபெற்ற நடைப்பயண பரப்புரை இயக்கத்துக்கு ஒன்றிய செயலா் எம். பழனி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழுத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோ.பழனிச்சாமி பரப்புரை இயக்கத்தை தொடங்கிவைத்து கோரிக்கைகளை விளைக்கி பேசினாா். மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு.அ. பாரதி உள்ளிட்ட நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
நாச்சியாா்கோவிலை தலைமை இடமாக கொண்டு தனி வட்டம், ஆடுதுறையில் விவசாய கல்லூரி, விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.