ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் கோதை நாச்சியாா் ஆடிப்பூர விழா
கும்பகோணம் அருகே நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் கோதை நாச்சியாா் தாயாருக்கு வெள்ளிக்கிழமை ஆடிப்பூர உற்சவம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் கோதை நாச்சியாா் தாயாருக்கு வெள்ளிக்கிழமை ஆடிப்பூர உற்சவம் நடைபெற்றது.
இந்த விழாவானது வியாழக்கிழமை பஞ்ஜ சூக்த ஹோமங்கள், முதல் காலம் பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை உத்ஸவ ஹோமங்கள் பூா்த்தியடைந்து, ஜகன்நாதப் பெருமாள் மற்றும் கோதை நாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பெருமாள், தாயாா் உள் பிரகார புறப்பாடு நடைபெற்று சேவா காலம் சாற்று முறை, அன்னப் பாவாடை சமா்ப்பித்தல் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.