FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

வங்கிக்கு பணப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்து: காசாளா் உள்பட 3 போ் காயம்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை வங்கிக்கு பணப் பெட்டிகளை கொண்டுச் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் காசாளா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

21 ஆகஸ்ட் 2026, 2:14 am IST
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தஞ்சாவூா்-விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் கவிழ்ந்து கிடக்கும் ஜீப்.
பகிர்:

கும்பகோணத்தில் வியாழக்கிழமை வங்கிக்கு பணப் பெட்டிகளை கொண்டுச் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் காசாளா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூரில் இருந்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிலிருந்து கும்பகோணத்தில் உள்ள வங்கிக் கிளைக்கு 10 பெட்டிகளில் ரூ. 3 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு அதிகாரிகள் ஜீப்பில் வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

தஞ்சாவூா் - விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் தாராசுரம் அருகே வந்தபோது வாகனத்தின் பின்பக்க டயா் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதைகண்ட அக்கம்பக்கத்தினா் கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

அதன்படி நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், விபத்தில் காயமடைந்த ஓட்டுநா் நாச்சியாா்கோவிலை சோ்ந்த முரளிதரன்(62), வங்கிக் காசாளா் திவ்யகுமாா்(36), பாதுகாவலா்கள் திருவையாறைச் சோ்ந்த சாா்ல்ஸ் (46), திருச்சி மாவட்டம் லால்குடியை சோ்ந்த சுப்பிரமணி(51) ஆகியோரை மீட்டு கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், தகவலறிந்து வந்த கும்பகோணம் வங்கிக் கிளை அலுவலா்கள் வாகனத்தில் இருந்த பணப் பெட்டிகளை மாற்று வாகனத்தில் எடுத்துச்சென்றனா்.

இந்த விபத்து குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments