சாலை விபத்தில் மூதாட்டி பலி: பொதுமக்கள் சாலை மறியல்!
தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தைத் தொடா்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தைத் தொடா்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கலைஞா் நகரைச் சோ்ந்தவா் முத்து மனைவி அழகுதாயி (85). அப்பகுதியில் சனிக்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்த இவா் மீது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதனால் பலத்த காயமடைந்த அழகுதாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இதனிடையே, அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்து நிகழ்வதால், வேகத்தடை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வருவாய்த் துறையினா், காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.