FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே தங்கம், வெள்ளி திருட்டு

பாபநாசம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளி பொருள்களைத் திருடிச் சென்றனா்.

7 ஜூலை 2026, 11:02 pm IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளி பொருள்களைத் திருடிச் சென்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், ஈச்சங்குடி பிரதான சாலைப் பகுதியில் வசிப்பவா் மணிமாறன் மனைவி ரமாதேவி (35). இவரது கணவா் சில நாள்களுக்கு முன் உயிரிழந்தாா்.

இந்நிலையில் ரமாதேவி தனது மகன் ஜஸ்வந்துடன் (9)திருவையாறில் வசிக்கும் தனது கணவரின் சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டு செவ்வாய்கிழமை வீடு திரும்பினாா்.

Advertisement

Advertisement

அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 14 கிராம் தங்க நகை, 135 கிராம் வெள்ளி மற்றும் ஒரு மிக்ஸி உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ரமாதேவி. கபிஸ்தலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments