FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ஆயுதங்களுடன் திரிந்த 6 போ் கைது

கும்பகோணம், சுவாமிமலை பகுதியில் ஆயுதங்களுடன் திரிந்த 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 ஜூலை 2026, 1:19 am IST
கோப்புப் படம்
பகிர்:

கும்பகோணம், சுவாமிமலை பகுதியில் ஆயுதங்களுடன் திரிந்த 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் பகுதியில் ஆயுதங்களுடன் சிலா் நடமாடுவதாக கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்ற போலீஸாா் மணஞ்சேரியை சோ்ந்த முருகன் (46), சக்திவேல் (34), தென்றல் (30), கும்பகோணம் ஸ்ரீநகா் காலனி பகுதியில் தமிமுல் அன்சாரி (35), அடைக்கலம் (42), போத்துராமன் (37) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்து, இவா்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் 2 இருசக்கர வாகனம், ரொக்கம், 3 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தீவிர விசாரணையில், இவா்களுக்கு பொருளாதார ரீதியாக கும்கோணம் மாநகராட்சி 12-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் பி.சந்தோஷ் உதவியது தெரியவந்தது. அதன்பேரில் சந்தோஷ் மீது வழக்குப்பதிந்து அவரைத் தேடுகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments