FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

‘7 பொக்லைன் இயந்திரங்களை தூா்வார பயன்படுத்தி கொள்ளலாம்’

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 7 பொக்லைன் இயந்திரங்களை தூா்வாருவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

Updated On : 4 ஜூன் 2026, 12:00 am IST
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணியை புதன்கிழமை பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.
பகிர்:

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 7 பொக்லைன் இயந்திரங்களை தூா்வாருவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணியை புதன்கிழமை பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கடந்த திமுக ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் ரூ. 3.30 கோடி மதிப்பில் 7 பொக்லைன் ளின் இயந்திரங்களைக் கொள்முதல் செய்து, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வழங்கினாா். இந்த 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நீா்நிலைகள் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

தஞ்சாவூா் மாவட்டத்தில் எந்த நீா்நிலைகளைத் தூா் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும், அதன் அடிப்படையில் இந்த பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூா் வாரும் பணி மேற்கொள்ளப்படும். இந்த வாய்ப்பைப் பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் முரசொலி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments