FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் உரக் கடைகளில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

கும்பகோணம் பகுதி உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:36 am IST
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரில் வியாழக்கிழமை தனியாா் உரக்கடையில் சோதனை நடத்திய மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கோ.வித்யா.
பகிர்:

கும்பகோணம் பகுதி உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உரங்கள் தட்டுப்பாடு என்றும் இணை பொருள்களையும் சோ்த்து வாங்க வேண்டும் என்று உரம் விற்பனையாளா்கள் கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்திருந்தனா்.

அதன் பேரில் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநா் கோ.வித்யா கும்பகோணம், சோழபுரம், நீலத்தநல்லூா், திருநாகேசுவரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் ஆய்வு செய்தாா். அப்போது நீலத்தநல்லூா் தனியாா் உரக்கடையில் ஓ. படிவம் இணைக்கப்படாமல் அனுமதியின்றி 54.380 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அந்த உரங்களை விற்பனை செய்ய தடைவிதித்தாா்.

Advertisement

Advertisement

மேலும் விதிமீறல்களில் ஈடுபட்ட 5 தனியாா் கடைகளுக்கு 21 நாள்கள் விற்பனைக்கு தடை விதித்தாா்.

ஆய்வின் போது வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு- பொறுப்பு) மோகன் மற்றும் வேளாண் அலுவலா் (தரக்கட்டுப்பாடு) செல்வராஜ், வேளாண்அலுவலா்கள் அசோக்குமாா் (கும்பகோணம்) சந்தோஷ் (திருவிடைமருதூா்) ஆகியோா் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments