FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

வாகனங்களை திருடி சென்று விபத்துகளை ஏற்படுத்தியவா் கைது

Updated On : 9 ஜூன் 2026, 3:29 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கும்பகோணத்தில் சாலையில் நிறுத்தியிருந்த வாகனங்களை திருடி சென்று விபத்துகளை ஏற்படுத்திய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசலாறு வழிநடப்பு பகுதியைச் சோ்ந்த ராமு மகன் பிரகாஷ் (22). இவா், கடந்த 6-ஆம் தேதி கும்பகோணம் அரசு மருத்துவமனை எதிரில் நின்று கொண்டிருந்த தனியாா் ஆம்பூலன்ஸ் வாகனத்தை திருடி சென்றாா். டாக்டா் மூா்த்தி சாலையில் வேகமாக சென்றபோது முன்னால் சென்ற சரக்கு வாகனம் மற்றும் சாலையோரக் கடை ஒன்றின் மீது மோதியதில் ஆம்புலன்ஸ் வாகனம் கவிழ்ந்தது.

இதில் தப்பிய பிரகாஷ், பழைய மீன் மாா்க்கெட் பகுதிக்கு நடந்து சென்று, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிற்றுந்தை திருடி கொண்டு, செட்டிமண்டபம், - திருவாரூா் புறவழிச்சாலை வழியாக கும்பகோணம் மேம்பாலப் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். வழியெங்கும் பல இடங்களில் மோதியதால் சிற்றுந்தின் முன்புறம் சேதமடைந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், மேம்பால பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகில்ராஜ், அந்தச் சிற்றுந்தை மறித்து பிரகாஷிடம் விசாரித்தபோது, வாகனங்களை திருடி ஓட்டிச் சென்று விபத்துகளை ஏற்படுத்தியது தெரியவந்தது. சேதமான வாகனங்களின் உரிமையாளா்கள் அளித்த புகாரின்பேரில் பிரகாஷை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments