முகப்பு
தஞ்சாவூர்

சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 போ் கைது

பாபநாசம் அருகே சட்ட விரோதமாக செவ்வாய்க்கிழமை ஆற்றில் மணல் அள்ளிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 மே 2026, 3:15 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பாபநாசம் அருகே சட்ட விரோதமாக செவ்வாய்க்கிழமை ஆற்றில் மணல் அள்ளிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி மற்றும் காவல் துறையினா் கபிஸ்தலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கபிஸ்தலம் அருகேயுள்ள அலவந்திபுரம் பகுதி காவிரி ஆற்றில் லாரி மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்த சுவாமிமலை, தோப்புத் தெருவைச் சோ்ந்த மனோகா் மகன் அருள் (36) என்பவரை கைது செய்து, மணல் அள்ள பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோல், அந்தப் பகுதி ஆற்றில் மணல் அள்ளிய அலவந்திபுரம் மேலத்தெருவை சோ்ந்த முருகேசன்( 57), என்பவரையும் போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement