பெட்ரோல், மது விற்றவர் கைது
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மணமேடு பகுதியில் சட்டவிரோதமாக பெட்ரோல், மது விற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மணமேடு பகுதியில் சட்டவிரோதமாக பெட்ரோல், மது விற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
முசிறி காவல் கண்காணிப்பாளர் சீத்தாராமன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பவித்திரம் - மணமேடு சாலையில் உள்ள சின்னவாய்க்கால் பாலம் அருகே பெட்ரோலையும், அரசு மதுவையும் விற்ற மணமேட்டை சேர்ந்த பாரதிராஜாவை (32) கைது செய்தார்.
அவரிடமிருந்து 25 லிட்டர் பெட்ரோல் மற்றும் 45 மது புட்டிகளை பறிமுதல் செய்து தொட்டியம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.