காவல்துறை தேர்வு: ஆணையரகத்தில் இலவச உதவி மையம் தொடக்கம்
தமிழக காவல்துறைக்கான தேர்வில் பங்கேற்போருக்கு உதவும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் இலவச உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறைக்கான தேர்வில் பங்கேற்போருக்கு உதவும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் இலவச உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2018-ஆம் ஆண்டில் 202 உதவி (சார்பு) ஆய்வாளர்கள்(விரல் ரேகை) தேர்வு செய்யப்பட உள்ளனர். இத் தேர்விற்கு விண்ணப்பிப்போர்களுக்கு உதவிடும் வகையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை முதல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் காலை 9 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மேலும் இதுகுறித்த விபரங்களுக்கு 94981-57106, 94981-12299 என்ற செல்லிடப்பேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.