குழந்தை கடத்த வந்தவர்கள் எனக் கருதி 2 பேர் போலீஸில் ஒப்படைப்பு
திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தில் மாந்திரீகம், ராசிக்கல், தாயத்து விற்பனை செய்வதாகக் கூறி இருவர் சுற்றி வந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தில் மாந்திரீகம், ராசிக்கல், தாயத்து விற்பனை செய்வதாகக் கூறி இருவர் சுற்றி வந்துள்ளனர். இதில் கீழ ஈச்சம்பட்டியைச் சேர்ந்த பகவதி என்ற பெண்ணிடம், தீயசக்திகள் ஆபத்து இருப்பதாகக் கூறி ராசிக்கல் மோதிரம், தாயத்தை ரூ.3 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர்.
அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து சுற்றித் திரிந்ததால் சந்தேகமடைந்த கிராம மக்கள், இருவரிடம் விசாரணை நடத்திய போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்களை குழந்தை கடத்த வந்தவர்கள் எனக் கருதிய கிராம மக்கள், இருவரையும் தாக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மதுரை மாவட்டம், சத்தியமங்கலம் அன்னை சத்யா நகரில் வசித்து வரும் முகமது இக்பால் மகன் சதாம் உசேன்(29), ஷாஜகான் மகன் சிக்கந்தர்(28) என்பதும், ராசிக்கல் மோதிரம், தாயத்து விற்பனை செய்து வருவதாகத் தெரிவித்தனர். புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீஸார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.