தீக்காயமடைந்த தம்பதி மருத்துவமனையில் அனுமதி
தீக்காயத்துடன் கொண்டு வரப்பட்ட தம்பதி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
தீக்காயத்துடன் கொண்டு வரப்பட்ட தம்பதி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், பச்சமலை ஓடைக்காட்டுப் புதூரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ராமகிருஷ்ணன்(36). இவருடைய மனைவி கவிதா(26). இவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தம்பதி இருவரும் தீக்காயங்களுடன் துறையூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு வந்தனர். இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.