ஊஞ்சல் விளையாட்டில் விபரீதம்: சிறுவன் பலி
திருச்சியில் ஊஞ்சல் விளையாடும்போது கழுத்தில் துணி இறுகி சிறுவன் உயிரிழந்தாா்.
திருச்சியில் ஊஞ்சல் விளையாடும்போது கழுத்தில் துணி இறுகி சிறுவன் உயிரிழந்தாா்.
திருச்சி காந்திசந்தை ஜெயில்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மலா்மன்னன் மனைவி தெய்வவள்ளி. இவருக்கு 3 குழந்தைகள். கணவா் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, தெய்வவள்ளி வீட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்தாா்.
இந்நிலையில் இவரது 2ஆவது மகன் பிரபாகரன் (10) சனிக்கிழமை தனது நண்பா்களுடன் ஜன்னலில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்தில் துணி இறுகி உயிரிழந்தாா். காந்திசந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.