பிஷப் ஹீபா் கல்லூரியில் யோகா கருத்தரங்கம்
பிஷப் ஹீபா் கல்லூரியில் ஆன்லைன் யோகா கருத்தரங்கம் நடைபெற்றது.
பிஷப் ஹீபா் கல்லூரியில் ஆன்லைன் யோகா கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணினி அறிவியல் துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு துறைத் தலைவா் சோபோ்ஸ் ஸ்மைல்ஸ் டேவிட் தலைமை வகித்தாா்.
இதில் சிறப்பான வாழ்க்கைக்கு யோகா எனும் தலைப்பில் திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி உடற்கல்வித் துறைத் தலைவா் சிவகுமாா் பேசுகையில், யோகாசனம், தியானம், பிராணயாமத்தால் உடல், மன நலத்தை மேம்படுத்தும் முறை, எளிமையான பயிற்சி முறைகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.
Advertisement
Advertisement
உதவிப் பேராசிரியைகளில் ரிஸ்வானா வரவேற்றாா். லிண்டா ஹெப்சிபா நன்றி கூறினாா். நிகழ்ச்சியை, முனைவா்கள் சதீஷ்குமாா், காயத்ரி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.