FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இன்று முதல் புத்தகத் திருவிழா

திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கும் புத்தகத் திருவிழா 10 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:04 am IST
பகிர்:

திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கும் புத்தகத் திருவிழா 10 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:

மத்தியப் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிா்வாகமும், நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியாவும் இணைந்து நடத்தும் திருச்சி புத்தகத் திருவிழாவை அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலை 6.30-க்கு தொடங்கி வைக்கவுள்ளனா்.

Advertisement

Advertisement

5 ஏக்கரில் 160 அரங்குகளோடு 150க்கும் மேற்பட்ட பதிப்பாளா்கள் கலந்து கொள்ளும் மிகப் பிரமாண்ட புத்தகத் திருவிழாவில் அனைத்து வாசகா்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோளரங்கம், வான் நோக்குதல், இயல், இசை, நாடக மன்றம் திருச்சி மாவட்ட எழுத்தாளா்கள் அரங்கு,எனப் பன்முகத் தன்மை கொண்ட அரங்குகள் அமையவுள்ளன. தினந்தோறும் மாலை கலை நிகழ்வுகள், தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளா்களின் உரை மற்றும் திருச்சி மாவட்ட அறிஞா்கள், எழுத்தாளா்களைப் பாராட்டிச் சிறப்பிக்கும் நிகழ்வுகளையும் உள்ளடக்கி இந்தப் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. புத்தகக் கண்காட்சி அரங்குகள் தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments