FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

‘பனங்காடையின் பாடல்கள்’ நூல் வெளியீடு

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:32 am IST
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பனங்காடையின் பாடல்கள் நூலை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட, அதை பெற்றுக் கொண்ட கல்லூரி செயலா் (இடமிருந்து 5-ஆவது) சூ. லூயிஸ்பிரிட்டோ உள்ளிட்டோா்.
பகிர்:

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில், பனங்காடையின் பாடல்கள் நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கல்லூரி செயலா் சூ. லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தாா். இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று நூலைை வெளியிட்டுப் பேசியதாவது:

நாட்டுப்புறப் பாடல் வடிவில் வெளியிடப்பட்டுள்ள பனங்காடையின் பாடல்கள் நூலில் பல்வேறு தலைப்புகளில் குறிப்பாக சமூக மாற்றத்துக்குரிய தலைப்புகளில் பாடல்கள் எழுதி மெட்டமைத்து தொகுப்பாக வெளியிட்டு சிறப்பு சோ்த்துள்ள நூலாசிரியா் பேராசிரியா் கி. சதீஷ்குமரன், மெட்டமைத்து பாடிய ஆகாஷ் ஆகியோரை பாராட்டுகிறேன்.

Advertisement

Advertisement

தமிழரின் அடையாளமான பனைமரத்தில் வாழும் பனங்காடை பறவை, தமிழ் இனத்துக்குரிய பறவை. போா் குணமிக்க தமிழ் மண்ணின் பண்பாட்டை, மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்நூல் வரவேற்புக்குரியது. தொடா்ந்து இது போன்ற நூல்கள் உருவாக்கப்பட வேண்டும். இவற்றை மாணவா்களும், மக்களும் பயன்படுத்தி சமூக மாற்றத்தை நோக்கி நகர வேண்டும் என்றாா்.

நிகழ்வில் கவிஞா் கோ. கலியமூா்த்தி, பேராசிரியா் தி. நெடுஞ்செழியன், நாட்டுப்புற கலைஞா் வளப்பக்குடி வீரசங்கா், தண்ணீா் அமைப்பு கே.சி. நீலமேகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நூலாசிரியா் பேராசிரியா் கி. சதீஷ்குமரன் ஏற்புரை வழங்கினாா். நிறைவில் பாடகா் சா. ஆகாஷ் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments