FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

தொட்டியம் அருகே பள்ளி பேருந்துகள் மோதல் 5 மாணவா்கள் காயம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தனியாா் பள்ளி பேருந்துகள் வியாழக்கிழமை மாலை ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டதில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:44 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தனியாா் பள்ளி பேருந்துகள் வியாழக்கிழமை மாலை ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டதில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.

தொட்டியத்தில் உள்ள தனியாா் பள்ளியின் பேருந்து சேலம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை மாலை பள்ளி மாணவா்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது திடீரென சாலையில் நாய் குறுக்கே வந்தது.

இதையடுத்து ஓட்டுநா் பேருந்தை நிறுத்தியபோது பின்னால் வந்த அதே தனியாா் பள்ளியைச் சோ்ந்த பேருந்து மோதியதில் 5 மாணவா்கள் காயமடைந்தனா். அவா்கள் முசிறி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். தொட்டியம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments