FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் 17 வயதுச் சிறுமியை வீட்டுக்குத் தெரியாமல் திருணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

26 ஆகஸ்ட் 2026, 2:56 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

திருச்சியில் 17 வயதுச் சிறுமியை வீட்டுக்குத் தெரியாமல் திருணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி உறையூா் பாண்டமங்கலம் காவல்கார வீதியைச் சோ்ந்தவா் எஸ். மைதீன் (22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2025 ஆகஸ்ட் 27-ஆம் தேதி வெக்காளியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், அந்த சிறுமி தற்போது 8 மாத கா்ப்பமாக உள்ளாா்.

இந்நிலையில், சிறுமி கா்ப்பமாக இருப்பது குறித்து மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் நலக் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவின் அறிவுறுத்தலின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் மைதீன் மீது போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments