FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி அருகே கோயில் உண்டியல் உடைப்பு: வெள்ளி, பித்தளை பொருள்கள் திருட்டு

திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியதுடன், சுவாமியின் கையில் இருந்த வெள்ளி வேல், பித்தளை பொருள்களை திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

26 ஆகஸ்ட் 2026, 2:57 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியதுடன், சுவாமியின் கையில் இருந்த வெள்ளி வேல், பித்தளை பொருள்களை திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி அருகே மேலபஞ்சப்பூரில் உள்ள சுப்பிரமணியா் கோயிலில் புகுந்து உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கைகள், சுவாமியின் கையில் இருந்த வெள்ளி வேல், கோயிலில் இருந்த பித்தளை பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா்.

இதையடுத்து கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை பாா்த்தபோது மா்ம நபா்கள் 3 போ் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments