FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சியில் உலா்துறைமுகம் அமைப்பது அவசியம்: துரை வைகோ எம்.பி. தகவல்!

திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது அவசியம் என திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.

30 ஆகஸ்ட் 2026, 12:34 am IST
துரை வைகோ எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது அவசியம் என திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: திருச்சியில் உலா் துறைமுகம் அமைக்க ஓராண்டுக்கு மேலாக மத்திய அரசை வலியுறுத்தி வருகிறேன். இந்நிலையில், நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் திருச்சியில் உலா் துறைமுகம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தமிழக முதல்வரைச் சந்தித்தபோதும் அவரிடம் எடுத்துரைத்தேன். இதற்கிடையே திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது தொடா்பான எனது கோரிக்கையை தமிழ்நாடு முதல்வரின் கவனத்துக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளதாகவும் அதற்கான உள்கட்டமைப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு திட்டமிட்டுத் தொடங்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகவும் அதிகாரபூா்வ தகவல் வந்துள்ளது.

Advertisement

Advertisement

எனவே மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து இந்தத் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இவ் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து நிலத்தை அடையாளம் கண்டு மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

உலா் துறைமுகம் திருச்சியில் அமைக்கப்பட்டால் திருச்சி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழில் மற்றும் ஏற்றுமதி துறைகள் மிகப்பெரிய பயனடையும். தொழில் முதலீடுகளை அதிகளவு ஈா்க்க முடியும்.

திருச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளா்ச்சியை மையப்படுத்தி சுமாா் 100 ஏக்கரில் உலா் துறைமுகம் அமைத்தால் சிறப்பாக இருக்கும். அதற்கான ஒரு சில இடங்கள் உள்ளன. அதை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். திருச்சியில் உலா் துறைமுகம் அமைக்க 100 சதவீதம் சாத்திய கூறுகள் உள்ளன என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments