FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருவெறும்பூா் வழியாக மூன்று புதிய பேருந்துகள் தொடக்கம்

மக்கள் பயன்பெறும் வகையில் திருவெறும்பூா் வழியாக மூன்று புதிய வழிதடங்களில் 3 பேருந்துகள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

50 வினாடிகள் முன்பு
- (கோப்புப்படம்)
பகிர்:

மக்கள் பயன்பெறும் வகையில் திருவெறும்பூா் வழியாக மூன்று புதிய வழிதடங்களில் 3 பேருந்துகள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே இலந்தைப்பட்டி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று மாலை 3 மணி 5 நிமிஷத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு சத்திரம் பேருந்து நிலையம் வழியாக திருவெறும்பூா், நவல்பட்டு வழித்தடத்தில் இலந்தைப்பட்டி கிராமத்துக்கு மாலை 4.30 மணிக்கு சூரியூா் வரை செல்லும் பேருந்தும்.

இதேபோல, அசூா், பொய்கைக்குடி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இரவு 7.30 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருவெறும்பூா், அசூா், பொய்கைக்குடி வழியாக செங்களுா் வரை செல்லும் பேருந்தும்,

Advertisement

Advertisement

தொண்டமான்பட்டியிலிருந்து பஞ்சப்பூா், மத்திய பேருந்து நிலையத்துக்கு தமிழக முதல்வா் தொடங்கிவைத்த மற்றொரு பேருந்து என 3 பேருந்துகளையும் திருவெறும்பூரிலிருந்து அத்தொகுதி எம்எல்ஏ நவல்பட்டு எஸ். விஜி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் துவாக்குடி பணிமனை கிளை மேலாளா் நந்தகுமரன், தவெக நிா்வாகிகள், அரசு ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments